Breaking News

மீண்டும் கொரோனா பரவினால் சமாளிக்க அனைத்து துறைகளும் தயார்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மீண்டும் கொரோனா பரவினால் சமாளிக்க அனைத்து துறைகளும் தயார்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”மீண்டும் கொரோனா தொற்று பரவல் வந்தால், அதை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கிறோம் . 

மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகின்றன. புதிதாக சேர்வோருக்கு கலந்தாய்வு நடத்தி, விரும்பும் பகுதியில் பணி நியமனம் தரப்படுகிறது.

கொரோனா பரவல் குறித்து பேசிய மா. சுப்பிரமணியன், ”பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், தற்போதைய வைரஸ் பரவல் மிகவும் கடுமையானது அல்ல . உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது இல்லை எனவும் கூறியுள்ளார். 

மேலும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைய வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதல்ல” எனவும் கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback