சென்னையில் கணவன் - மனைவி என வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி - காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில், காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவன் ஆகாஷ் (19), தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.
கணவன்-மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து இருவரும் தங்கியிருந்த நிலையில் ஓரே வாரத்தில் விபரீத முடிவு.தகவல் அறிந்து ஐசிஎஃப் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் கல்லூரி மாணவன் ஆகாஷ் தனது காதலியுடன் வீடு வாடகைக்கு எடுத்ததாகவும், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கிறோம் என்று வீட்டு ஓனரிடம் கூறியிருந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், புதிய வீட்டிற்கு குடி வந்த ஒரே வாரத்தில் ஆகாஷ் மற்றும் அவருடைய காதலிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, காதலியை கொலை செய்துவிட்டதாக இருக்கிறது. அதனை அடுத்து, ஆகாஷ் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு அந்த வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை ஜன்னல் வழியாக பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் அந்த இளம் பெண் கீழே பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இருவரது உடலையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
இருவரும் ப்ராஜெக்ட் வேலைக்காக சென்னைக்கு செல்வதாக இருவரும் தங்கள் வீட்டில் கூறிவிட்டு வந்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்