Breaking News

சென்னையில் பட்டபகலில் நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க சொல்லி மிரட்டி,முடியைப் பிடித்து தாக்கிய அதிமுக பிரமுகர் கைது

அட்மின் மீடியா
0

சென்னையில் பட்டபகலில் நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க சொல்லி மிரட்டி,முடியைப் பிடித்து தாக்கிய இளைஞர் கைது



சென்னையில் பட்டபகலில் நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க சொல்லி மிரட்டி,முடியைப் பிடித்து தாக்கிய அதிமுக பிரமுகர் கைது

சென்னை ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டி, கன்னத்தில் அறைந்து முடியைப் பிடித்து தாக்கியுள்ளார். மாணவியை நடுரோட்டில் தாக்கியதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், அதிமுக இளைஞர் பாசறை 118வது வட்டச் செயலாளர் சூர்யாவை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தப்பி ஓடினார். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காரில் மது விற்ற வழக்கில் கைதான சூர்யா (18) ஜாமினில் வெளியே வந்துள்ளார். தனது மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் மாமூல் வசூல், இலவச பிரியாணி கேட்டு மிரட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த போது ராயப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback