நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? நீதிமன்றத்தில் நித்தியானந்தா சீடர் அளித்த பதில் முழு விவரம்
நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? நீதிமன்றத்தில் நித்தியானந்தா சீடர் அளித்த பதில் முழு விவரம்
கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது?'' - என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விக்கு பதில் அளித்த அவர சீடர்
ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்ற தனிநாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக அவரது சீடர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடுத்து, நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் அவரது சீடர் அரச்சனா என்பவர் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அதில் மனுதாரர் எங்கு உள்ளார். கைலாசா எங்கு உள்ளது. அங்கு எப்படி செல்வது?நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதை தொடர்ந்து, அவரது சீடர் அரச்சனா என்பவர், ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK UNITED STATES OF KAILASA என்ற தனி நாட்டில் நித்யானந்தா உள்ளார். அந்நாட்டிற்கு ஐநா சபையில் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார். இதை தொடர்ந்து, நீதிபதிகள், வழக்கறிஞர் மாற்றுவதற்கு அனுமதி வழங்கி , வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்