அரசு பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த பேருந்து நிலைய மேலாளர் வைரல் வீடியோ
அரசு பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த பேருந்து நிலைய மேலாளர் வைரல் வீடியோ
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனரை பேருந்து நிலைய மேலாளர் மாரிமுத்து செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாரிமுத்துவை பணிநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் பயணிகளை இறக்கி விடும் இடத்தில் பயணிகள் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர். இருக்கைகள் நிரம்பியும் ஏராளமான பயணிகள் நின்று கொண்டு பயணிக்கவும் தயாராக இருந்தனர்.
இந்நிலையில், பேருந்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்லாமல் பயணிகளை ஏற்றியதாக கூறி பேருந்தின் நடத்துநரிடம் இருந்த இன்வாய்ஸை ஆர்ப்பாளையம் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் மாரிமுத்து வாங்கிக் கொண்டார்.
மேலும் பேருந்து நிலையத்துக்குள் பேருந்தை கொண்டு வந்து நிறுத்த உத்தரவிட்டார்.
பின்னர் பயணிகள் அனைவரும் பேருந்து நிலைய போக்குவரத்துக் கழக அலுவலகம் சென்று துணை மேலாளர் மாரிமுத்துவை சந்தித்து நடத்துநரிடம் இன்வாய்ஸை திரும்ப கொடுத்து பேருந்து கிளம்ப அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.இந்த நிலையில் பயணிகள் மற்றும் மேலாளர் இடையே வாக்குவாதம் தீவிரமானது.வாக்குவாதத்தின் போதே டிரைவர் கணேசனை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்ற உதவி மேலாளர் மாரிமுத்து, திடீரென தனது செருப்பால் அவரை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1932085706006188276
மன்னிப்பு வீடியோ:-
என்னால் போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் வேண்டாம், செருப்பால் அடித்த ஓட்டுநர் கணேசனிடமும் அரசிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என உதவி மேலாளர் மாரிமுத்து கூறிய வீடியோவும் வெளியாகி உள்ளது
Tags: தமிழக செய்திகள்