Breaking News

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


கல்வியாண்டின் பாதியில் ஓய்வுறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது

இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்- பள்ளிக்கல்வித்துறை

ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் போது, ஓய்வு காலத்தை கடந்தாலும், அந்த கல்வி ஆண்டு முடியும் மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்:-

அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை(ஏப்ரல்) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதைத் திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது. 

அக்கோரிக்கையை ஏற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது' என்று பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback