Breaking News

அஞ்சல் காப்பீடு முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

 அஞ்சல் காப்பீடு முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

அஞ்சல் துறையின் அம்பத்தூர் தலைமைஅலுவலகத்தில், ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்கா ணல் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய் திக் குறிப்பு: அஞ்சல் துறையின் அம்பத்தூர் தலைமை அலுவல கத்தில், காப்பீடு நேரடி முகவர் பொறுப்புக்கு உரிய நபர்கள் நிய 2மிக்கப்படவுள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் அம்பத் தூர் தலைமை அலுவலகத்தில் ஜூன் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்எல்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளைஞர்கள், காப்பீட்டு முக வர்கள், படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்க லாம். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடர்பான அசல், நகல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு:-

18 வயது நிரம்பியவர்கள் அதிகபட்ச வயது வரம்பு இல்லை 

கல்வி தகுதி:-

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

நேரடி முகவர் (DIRECT AGENT) பணிக்கு:-

வேலை இல்லாதோர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback