பாஸ்போர்ட் எடுக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
பாஸ்போர்ட் எடுக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். அந்த விண்ணப்பத்தை நிராகரித்து கணவரிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அந்த பெண்ணின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெறவேண்டிய அவசியம் கிடையாது.
பாஸ்போர்ட்டில் கனவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என விசாரணையில் கூறினார்.
கணவனிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் ஒரு பெண்ணை கணவனின் உடைமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது என நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை எனவும்விளக்கம் அளித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்