Breaking News

உ.பி.யில் பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்! வைரலாகும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

உ.பி.யில் பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்! வைரலாகும் சிசிடிவி வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திற்குட்பட்ட பில்கிராம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காரில் வந்த குடும்பத்தினர் காருக்கு கேஸ் நிரப்ப வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

அப்போது கேஸ் நிரப்பும்போது காரில் உள்ள அனைவரும் இறங்க வேண்டும் என பெட்ரோல் நிலைய ஊழியர் ரஜ்னேஷ் குமார் கோரியுள்ளார். 

அதற்க்கு காரில் வந்தவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இது வாய்தகறாரக மாறியுள்ளது. அப்போது ஓட்டுநரை ரஜ்னேஷை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது காரில் வந்த பெண் ஒருவர் காரில் இருந்து எடுத்து வந்த துப்பாக்கியை ரஜ்னேஷின் மார்பில் வைத்து மிரட்டியுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், துப்பாக்கி வைத்து மிரட்டிய ஈஷான் கான் மற்றும் அவரின் மகள் அர்பியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிக்கு அவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1934808118548181048

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback