Breaking News

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை - போர் தொடங்கியது என ஈரான் தளபதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது.




அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 

ஈரானின் உச்ச தலைவர் என அழைக்கப்படும் அயதுல்லா காமெனி எங்கு மறைந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு. ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்கட்டும்.

தற்போதைக்கு அவரை கொல்லப்போவதுகிடையாது. ஆனால், சாமானிய மக்களையோ, அமெரிக்க வீரர்களையோ ஏவுகணைகளை தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களது பொறுமை குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு நன்றி நிபந்தனையின்றி சரணடையுங்கள் இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் ஈரானின் வான்வெளி எங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளது. ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, பொருட்களுடன் ஒப்பிட முடியாது. அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களைவிட ஈரானின் ஆயுதங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி எக்ஸ்தளத்தில் 

உன்னதமான ஹைதரின் பெயரால், போர் தொடங்குகிறது என்று எச்சரித்துள்ளார்.

டிரம்பின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் கடும் பதிலடி கொடுக்கும் என்று தனது கருத்தை மீண்டும் அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.


இதுதொடர்பாக

 வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், "ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். 

மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளார்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஈரானின் போர்க்கால தலைமை தளபதியாக அடையாளம் காணப்படும் மூத்த ராணுவ தளபதியான அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் அயதுல்லா காமெனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று 





மெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்,'' என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.AdvertisementPowered by:PSAdvertisement: 0:03 ஈரான் அணுஆயுதம் தயாரிக்கக்கூடாது என அமெரிக்கா கூறி வருகிறது.இதையும் படிங்கஅமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு16-Jun-202517அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஇந்நிலையில், 



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback