புதிய வரலாறு படைத்த விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா முழு விவரம்
புதிய வரலாறு படைத்த விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா முழு விவரம்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு இந்தியா செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு வகையில் உதவ உள்ள பயணம் தான் ஆக்சியம் 4.
நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஆயத்தமாகினர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9- ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ராகேஷ் சர்மாவுக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர், விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றுள்ளார்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, இன்று (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைந்தனர்
அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.
விண்கலத்தில் இருந்த படி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா:
விண்வெளியில் இருந்து நமஸ்கார், மிக பெருமையாக உணர்கிறேன். இது மிகவும் அற்புதமான பயணம். சக விண்வெளி வீரர்களுடன் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் தனிப்பட்ட பயணம் அல்ல, சக வீரர்கள் ஒத்துழைப்போடு வெற்றியை நோக்கி பயணம் மேற்கொள்கிறேன். என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.எந்த வித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். அனுபவங்களை பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். சர்வதேச விண்வெளி மையத்தில் நேரத்தை செலவிட ஆவலாக உள்ளேன். ஒரு குழந்தையை போல் உணர்கிறேன் என சுக்லா பேசினார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ANI/status/1938119084367090041
Tags: இந்திய செய்திகள்