ஈரான் - இஸ்ரேல் போர் அங்கு உள்ள தமிழர்களை மீட்க உதவி எண் முதலமைச்சர் அறிவிப்பு
ஈரான் - இஸ்ரேல் போர் அங்கு உள்ள தமிழர்களை மீட்க உதவி எண் முதலமைச்சர் அறிவிப்பு
ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்களை பாதுகாக்க, தேவையான உதவிகள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல்-ஈரான் இடையே போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி 011 24193300
கைப்பேசி எண் 9289516712
மின்னஞ்சல்
tnhouse@tn.gov.in,
procofficetnh@gmail.com.
இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத்துறையை தமிழர்களின் விவரங்களை பெற்று உடனடியாக உதவ வேண்டும். ஈரான், இஸ்ரேல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்