அதிகரிக்கும் கொரோனா விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு! முழு விவரம் இதோ
அட்மின் மீடியா
0
அதிகரிக்கும் கொரோனா விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம் பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில், இன்று தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக அதிகரித்துள்ளது. துயர இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: கொரானா செய்திகள்