வீட்டு வேலை செய்ய கணவர் நிர்பந்தம் , வீடியோ போடமுடியதாதால் இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - கணவன் மீது புகாரளித்த பெண்!
வீட்டு வேலை செய்ய கணவர் நிர்பந்தம் , வீடியோ போடமுடியதாதால் இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - கணவன் மீது புகாரளித்த பெண்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், தன்னை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட விடாமல் வீட்டு வேலை செய்ய சொல்வதாகவும், இதனால் இன்ஸ்டாகிராமில் தனக்கு இருந்த ஃபாலோவர்ஸ்களில் இரண்டு பேர் குறைந்துவிட்டதாகவும் கணவன் மீது புகார் அளித்துள்ளார்.
கணவனின் வற்புறுத்தலால் துணி துவைப்பது, வீட்டை தூய்மையாக வைத்திருப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டேன். இதனால் ரீல்ஸ் பதிவேற்ற முடியாததால் என்னுடைய ஃபாலோவர்ஸ் குறைந்துவிட்டார்கள். நான் தினமும் இரண்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தேன். அதை செய்யாததால் ஃபாலோவர்ஸ் குறைந்துவிட்டனர்” என புகாரளித்துள்ளார்.
இதனிடையே, கணவர் விஜேந்தரமும் மனைவி நிஷா மீது புகார் அளித்துள்ளார். அதில், “தனது மனைவி முழு நேரமும் இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கிக் கிடந்து வீட்டு வேலைகளை கண்டுகொள்வதில்லைம் அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்முரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது. எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கணவர் முன்வைத்தார்.இதையடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Tags: இந்திய செய்திகள்