Breaking News

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு


ஈரானின் ஃபர்தோ, நாடன்ஸ், எஸ்ஃபாஹனில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு.

தாக்குதலை வெற்றிகரமாக நடத்திவிட்டு அனைத்து போர் விமானங்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும், வேறு எந்த நாட்டு ராணுவமும் செய்யாத ஒன்றைச் செய்திருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.

ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். 

இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிவிட்டு அமெரிக்கா திரும்பிய பி2 போர் விமானங்கள் ராடார் உள்ளிட்ட எந்த கண்காணிப்பிலும் சிக்காமல் குண்டு வீசும் திறன் பெற்றது

பதுங்கு குழிகளையும் அழிக்கும் 13 ஆயிரம் கிலோ அளவுக்கு வெடிபொருள் கொண்ட குண்டை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல். தாக்குதலுக்கு உள்ளான அணுசக்தி நிலையங்களின் செயல்பாட்டை ஏற்கனவே நிறுத்தியிருந்ததாக ஈரான் விளக்கம்


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback