வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் ஜூன் 2ஆம் வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூன் 2ஆம் வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஜுன் 12ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், அன்றைய தினம்(ஜூன் 12 ஆம் தேதி ) தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
05-06-2025 மற்றும் 06-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07-06-2025 முதல் 09-06-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-06-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் ஜூன் 11, 12 ஆகிய 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்