வீட்டில் இருந்தே ஸ்மார்ட் போன் மூலம் தேர்தலில் வாக்களிக்கலாம் - பீகார் மாநிலத்தில் அறிமுகம் வீடியோ இணைப்பு
வீட்டில் இருந்தே ஸ்மார்ட் போன் மூலம் தேர்தலில் வாக்களிக்கலாம் - பீகார் மாநிலத்தில் அறிமுகம் வீடியோ இணைப்பு
நாட்டிலே முதல் மாநிலமாக, ஸ்மார்ட்போன் மூலம் வாக்கு செலுத்தும் நடைமுறையை பீகார் மாநிலம் நடைமுறைப்படுத்த உள்ளது.இதற்காக, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்(C-DAC) ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது.
இந்த ஆப்பில் வாக்குச்சாவடிக்கு நேரடியாக வரமுடியாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நபர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தே வாக்களிக்க முடியும்.
ஒரு ஸ்மார்ட் போனில், அதிகபட்சமாக 2 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யலாம். எந்த போனில் பதிவு செய்தோமோ, அந்த போனில் இருந்து மட்டுமே வாக்களிக்க முடியும். Front Camera உள்ள ஸ்மார்ட் போனில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
அதில் வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண்ணை கொடுத்து ‘Submit’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அது சரிபார்க்கப்பட்ட பின் ‘Device Authenticated’ என்ற குறுஞ்செய்தி வரும்.அதைத்தொடர்ந்து, வாக்காளர் அப்போது நேரலையில் Selfie எடுத்து அதில் சமர்பிக்க வேண்டும்.அது சரிபார்க்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியலில், யாருக்கு வாக்களிக்க விரும்புகிறோமோ அவரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு வலது பக்கம் உள்ள ‘Vote’ என்பதை க்ளிக் செய்து வாக்களிக்கலாம்.
மேலும் அதில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும். மேலும், வாக்கு செலுத்தியதற்கான சான்றாக வாக்காளர்களின் எண்ணுக்கு குறுஞ்செய்தியும்(SMS) அனுப்பப்படும்.
முன்னதாக, வாக்காளர் சரிபார்ப்புக்கான முக அங்கீகார அமைப்பு (FRS), வாக்கு எண்ணிக்கைக்கான OCR மற்றும் EVM இயந்திரங்களைப் பாதுகாப்பதற்கு அது வைக்கப்பட்டுள்ள அறைகளில் டிஜிட்டல் பூட்டு போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பீகார் மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/SECBihar/status/1937119964684853339
Tags: இந்திய செய்திகள்