Breaking News

விமான விபத்தில் பலியான நர்ஸ் குறித்து அவதூறு பரப்பிய துணை தாசில்தார் கைது

அட்மின் மீடியா
0

விமான விபத்தில் பலியான நர்ஸ் குறித்து அவதூறு பரப்பிய துணை தாசில்தார் கைது

அகமதாபாத் விமான விபத்தில் கொல்லப்பட்ட மலையாள செவிலியரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகப் பதிவை வெளியிட்டதற்காக கேரள அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டார் 



அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த கோர விமான விபத்தில் 274 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா என்ற நர்சும் பலியானார். 

இந்நிலையில் இவரை இழிவுபடுத்தும் வகையில் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு தாலுகா துணை தாசில்தாரான பவித்ரன் என்பவர் சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பகிர்ந்தார். 

ரஞ்சிதா லண்டனில் வேலைக்கு செல்வதற்கு முன் பத்தனம்திட்டாவில் ஒரு அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தான் லண்டனுக்கு இவர் புறப்பட்டார்.

அரசு வேலையை விட்டுவிட்டு சென்றதால் தான் ரஞ்சிதா விபத்தில் சிக்கினார் என்றும் பவித்ரன் விமர்சித்திருந்தார். மேலும் ரஞ்சிதாவுக்கு எதிராக சாதி ரீதியாகவும் இவர் விமர்சனம் செய்திருந்தார். 

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. துணை தாசில்தார் பவித்ரனுக்கு எதிராக நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்), காசர்கோடு தாலுகா யூனியன் தலைவர் பிரபாகரன் கரிச்சேரி புகார் அளித்தார்

மேலும் காஞ்சங்காடு மற்றும் வெள்ளரிக்குண்டு நகரங்களிலும் பெரும் போராட்டங்கள் நடந்தத், தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்)  மாவுங்கலில் உள்ள அவரது வீட்டிற்கு எதிர்ப்பு பேரணியை நடத்தின. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மகளிர் லீக் (எம்டபிள்யூஎல்) அவரை கைது செய்யக் கோரி காஞ்சங்காட் நகரில் கண்டன பேரணியை நடத்தின.வெள்ளரிகுண்டு நகரில் இளைஞர் காங்கிரஸ் தீப்பந்தங்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது, மேலும் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவரை அவமதிப்பது ஒரு கொடூரமான செயல். எனவே விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று அமைச்சர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரை துணை தாசில்தார் பதவியிலிருந்து காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 75 (பாலியல் துன்புறுத்தல்), 79 (பெண்களை அவமதித்தல்), 196 (குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு பாதகமான செயல்கள்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67A (பாலியல் வெளிப்படையான உள்ளடக்கத்தை ஆன்லைனில் வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் பவித்ரன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback