Breaking News

அயோத்தியைப் போல் பிஹாரில் பிரம்மாண்டமான சீதை கோயில் மாதிரி படம் வெளியிட்ட முதல்வர் நிதிஷ் குமார்

அட்மின் மீடியா
0

பிஹாரில் உள்ள சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. புனவுரா தாம் எனப்படும் இக்கோயில் உள்ள இடத்தில், சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. 






இந்த கோயிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிஹார் அரசு சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது மேலும் கோயில் புனரமைப்புக்காக முதல்கட்டமாக, ரூ.120 கோடி நிதியும் ஒதுக்கியது. 

இதற்கு புனவுரா தாம் கோயிலை அயோத்தியின் ராமர் கோயிலைப் போல் பிரம்மாண்டமாகக் கட்ட முடிவு செய்திருப்பது காரணம். இதன் புதிய வடிவமைப்பின் படங்களை நேற்று முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டார். 

இதைப் பாராட்டி அவர் அப்படங்களை தன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இக்கோயிலைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback