தென்காசியில் துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தலைமறைவான பாஜக முன்னாள் நிர்வாகி மும்பையில் கைது
தென்காசியில் துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தலைமறைவான பாஜக முன்னாள் நிர்வாகி மும்பையில் கைது
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக முன்னாள் நிர்வாகி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், சுரண்டையைச் சேர்ந்த 58 வயதான பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டன், தனியார் பேருந்து நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது, அங்கு தனியாக இருந்த 15 வயது சிறுமிக்குத் துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்யாமல் புகார் மனு கிடப்பில் போடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், நீலகண்டன் மீது 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மும்பையில் தலைமறைவாக இருந்த நீலகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரைத் தென்காசிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்