தமிழ்நாடு காவல் துறை எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாடு காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் (SI), தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த 1,299 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI தேர்வை ஒத்திவைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்ப்டி மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதற்கான விளக்கங்கள் வரும் வரை, எஸ்ஐ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரைவில் SI தேர்வு தேதி TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்