சென்னை மெட்ரோ குடிநீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு முழு விவரம் இதோ
சென்னை மெட்ரோ குடிநீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு முழு விவரம் இதோ
சென்னையில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் பள்ளிக்கு தாயுடன் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த 10 வயது சிறுமி சௌமியா பின்னால் வந்த லாரி மோதியதில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து மக்கள் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு செல்லும் பிஸியான நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான நேரக்கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.
இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் அருண் நடத்திய ஆலோசனையில் முடிவில், மெட்ரோ குடிநீர் லாரிகள் காலை 5 மணி முதல் 7.30 மணிக்குள் தண்ணீர் சப்ளை செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் சென்னையில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த பட்டியலை 3 நாள்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார்.
Tags: தமிழக செய்திகள்