Breaking News

சிறுவன் கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏடிஜிபி ஜெயராம் கைது

அட்மின் மீடியா
0

சிறுவன் கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏடிஜிபி ஜெயராம் கைது.

கடத்தலுக்கு அரசு வாகனத்தை ஜெயராம் பயன்படுத்தியதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறை குற்றச்சாட்டு

இதனிடையே, சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பு இருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபியை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இருவரும் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், இருவரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

விசாரணை மேற்கொண்ட நீதிபதி வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கும் மனுவை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து நீதிமன்றத்துக்கு போலீஸ் சீருடையில் வந்திருந்த ஜெயராம், சீருடையை மாற்றிய பிறகு கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback