அரசு பேருந்து கட்டணம் உயர்வா? - போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம்..!
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டண உயர்வு கிடையாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேருந்து கட்டண உயர்வு என்கிற செய்தி வலம் வருகிறது. குறிப்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகின்ற காரத்தினால் அந்தக் கூட்டங்களின் அடிப்படையில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என எதிர்க்கட்சிகளும் அந்த தகவலை பரப்புகின்றனர்.
ஆனால் இந்த நேரத்தில் அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வு என்பது இருக்காது. அரசு பேருந்து கட்டணம் உயராது என்பதால் தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அதன் உரிமையாளர்காள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் மக்களிடம் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், பொதும்மளிடம் பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்படு வருகிறது.இது அரசின் நிலைப்பாடு அல்ல; நீதிமன்றத்தின் அறிவுரையின்படி நடத்தப்படுகிறது. அரசை பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது இந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் டீசல் விலை உயர்ந்தபோது கூட அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதைபோல இன்று சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து இருந்தாலும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை” என்று தெரிவித்தார்
Tags: தமிழக செய்திகள்