பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் வழக்கு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன
காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வழக்கு
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரனை ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்க்கு 2 நாட்களுக்கு முன்பு சென்றனர்.அப்போது அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து புரட்சி பாரதம் கட்சியினர் கூச்சலிட்டனர்
மேலும் திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலை புரட்சி பாரதம் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கலைய செய்ய கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அதன் பின்பு வீட்டில் சென்று பார்த்த போலீசாருக்கு ஜெகன் மூர்த்தி தலைமறைவானார் இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், மேலும் இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக முறையிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி- ஜெயராமனுக்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
இதையடுத்து, இந்த வழக்கில், ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் கட்ட பஞ்சாயத்து செய்ய தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா என ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்,நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள்
உங்களைத் தவறாக பயன்படுத்தி இருந்தால் நீங்கள் காவல்துறை அழைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்க பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான். விசாரணைக்கு தனியாகத்தான் போக வேண்டும்
மேலும் தவறு செய்யவில்லை என்றால், எதற்காக காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, தவறு செய்யவில்லை என்றால் அச்சமில்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பூவை ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; விசாரணையின்போது கைது செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது; கைது செய்யப்பட்டால் ஜாமின் மனு தாக்கல் செய்யட்டும் - நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்
மு. ஜெகன்மூர்த்தி புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தி செப்டம்பர் 2, 2002 அன்று மாரடைப்பால் இறந்த பிறகு, பூவை மு. ஜெகன் மூர்த்தி செப்டம்பர் 7, 2002 அன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவரானார்.
2006 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து, அரக்கோணம் தொகுதிக்கான தமிழக சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 ம்m ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் கே. வி. குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்