Breaking News

கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை வேண்டுகோள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 



நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமெடுத்திருக்கின்ற நிலையில், ஆக்சிஜன், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதையும், அத்தியாவசிய மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவல் எதிரொலியாக கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும். அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை, இருந்தாலும் பாதுகாப்பிற்காக அணிவது நல்லது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback