வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து கொட்டிய மழைநீர் வைரல் வீடியோ
வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் நடந்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகள், ரயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்ததால் சிரமப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, ரயில்வே நிர்வாகத்திற்கு எதிரான கண்டனங்களை எழுப்பியுள்ளது.
ரயிலின் ஏசி பழுதடைந்து, மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்ததால், பயணிகளின் உடைமைகள் மற்றும் இருக்கைகள் நனைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்,
இது தொடர்பாக பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து கொட்டிய மழைநீர் என ஏசி வேலை செய்யவில்லை. தண்ணீர் கசிகிறது. இவ்வளவு கட்டணம் செலுத்தியும் வந்தே பாரத் ரயில் முற்றிலும் அசவுகரியமாக உள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரயில்வே தனது எக்ஸ் தளத்தில்
ஏசியின் டிரிப் டிரேவில் அடைப்பு இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Arv_Ind_Chauhan/status/1937449260389466470
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ