உத்தரப் பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
உத்தரப் பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை/
பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை உத்தரப் பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை Deepak Verma, who raped a 2.5 year old girl in Lucknow, was killed in an encounter by the Uttar Pradesh Police
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஆலம்பாக் பகுதியில் சிறுமி தனது பெற்றோருடன் சந்தன்நகர் மெட்ரோ நிலையம் அருகே வசித்து வந்தார். காலையில் சிறுமியை காணவில்லை, பெற்றோர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மெட்ரோ பாலத்தின் கீழ் மயக்க நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
பெற்றோர் சிறுமியை லோக் பந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர் , அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளனாத கூறியதை அடுத்து பெற்றோர் ஆலம்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் வர்மா என போலீசார் அடையாளம் கண்டனர். அவனை கைது செய்ய உடனே ஐந்து போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் அவரைக் கைது செய்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டோன்மென்ட்டில் உள்ள தேவி கேடா அருகே போலீசார் வர்மாவை சரணடைய சொல்லிய இடையே ஒரு மோதல் நடந்தது. தற்காப்புக்காக போலீசார் சுட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காயங்கள் காரணமாக இறந்தார்.
Tags: இந்திய செய்திகள்