தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் அவசியம்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு Aadhaar Mandatory for Train Ticket Booking
தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் அவசியம்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு Aadhaar Mandatory for Train Ticket Booking
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் இ-ஆதாரைக் கொண்டு டிஜிட்டல் சரிபார்ப்பு செய்ய வேண்டும். அதாவது, உங்கள் ஆதாரை IRCTC கணக்குடன் இணைக்க வேண்டும். இ-ஆதார் சரிபார்ப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வரலாம்.
அறிக்கைகளின்படி, தட்கல் முன்பதிவு சாளரம் திறக்கப்பட்ட முதல் 10 நிமிடங்களில், IRCTC கணக்கு ஆதாருடன் சரிபார்க்கப்பட்ட பயணிகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதாவது, தட்கல் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களுக்கு முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
போர்ட்டல் திறக்கப்பட்ட முதல் 10 நிமிடங்களில் IRCTCயின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
ரயில் பயணம் செய்ய பலரும் தட்கல் முறையில் டிக்கெட் பெற்று வருகின்றனர். இதற்கிடையே, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்து, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவதற்காக, இந்த போலி ஐடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் உருவாக்கப்பட்ட இரண்டரை கோடி போலி ஐடிகள் முடக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி தளத்தில் இ-ஆதார் வெரிபிகேஷன் மூலம் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு OTP வரும். அதைச் சமர்ப்பித்த பிறகு சரிபார்ப்பு முடிவடையும், பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். போலி ஐடியைக் கொண்டு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தடுக்க ரயில்வே இந்த விதியை அமல்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்