93 வயதில் தாலி வாங்க வந்த தம்பதி - 20 ரூபாய்க்கு தங்க தாலி கொடுத்த உரிமையாளர் உலகம் முழுவதும் வைரல் ஆகும் வீடியோ ! Rs 20 for Mangalsutra
அட்மின் மீடியா
0
93 வயதில் தாலி வாங்க வந்த தம்பதி - 20 ரூபாய்க்கு தங்க தாலி கொடுத்த உரிமையாளர் உலகம் முழுவதும் வைரல் ஆகும் வீடியோ ! Rs 20 for Mangalsutra
மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தன்னுடைய மனைவிக்கு தங்கத் தாலி வாங்க 1120 ரூபாயுடன் வந்த 93 வயது முதியவரின் வறுமையையும், வெகுளித்தனத்தையும் புரிந்து கொண்ட நகைக்கடைக்காரர் வெறும் 20 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று கூறி நகையை கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.
மகாராஷ்டிராவை சேர்ந்த நிவ்ருத்தி ஷிண்டே (93). என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தாபாய். ஆஷாதி ஏகாதசி பண்டிகை கொண்டாட பந்தர்பூருக்கு நடைபயண யாத்திரை மேற்கொண்டனர்.
வழியில் தனது மனைவிக்கு புதிய தாலி வாங்க சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள நகைக்கடைக்கு இருவரும் சென்றனர்.
அப்போது முதியவர் நகைகடையில் ரூ 1120 கொடுத்து தனது மனைவிக்கு தங்க சங்கிலியும் தாலியும் வேண்டும் என கேட்டார். இதனை கேட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்த நகை கடை உரிமையாளர் அவரிடம் விசாரிக்க இத்தனை வருஷத்துல இது வரைக்கும் நகை வாங்கினதே இல்லையாம். ஒரு நகைக் கடைக்கு வர்றது இதான் முதல் முறையாம் என்று அந்த அப்பாவி முதியவர் சொல்லை கேட்டு ஆடி போன உரிமையாளர். அவர்கள் தேர்வு செய்த நகையை அவரிடம் கொடுத்தார் அந்த அப்பாவி முதியவர் பதிலுக்கு ரூ 1120 பணம் கொடுத்தற்க்கு இறைவன் புண்ணியத்தில் என்கிட்ட ஏராளமான நகை பணம் சொத்தெல்லாம் இருக்கு. ஆனா, என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் பண்ணத்தான் பெரியவங்க யாருமே இல்லைன்னு சொல்லி ரூ 20 மட்டும் பணம் பெற்றுகொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்த உண்மை சம்பவம்!!!!
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1935939369707487656
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ