Breaking News

திருப்பூரில் சோகம் வரதட்சணை கொடுமை திருமணமான 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது

அட்மின் மீடியா
0

திருப்பூரில் சோகம் வரதட்சணை புகாரில் திருமணமான 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரைமகள் ரிதன்யா (27) என்பவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார் (28) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு காரில் சென்ற ரிதன்யா தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் கடுமையாக சித்திரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது எனவும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ மெசஜ் அனுப்பிவிட்டு காரிலேயே  தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்

நீண்ட நேரமாக கார் நிற்பதை கண்ட அப்பகுதி மக்கள் சேயூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் ரிதன்யாவின் உடலை கைப்பற்றிய அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 78 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்துள்ளார்கள்

இதனிடையே ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback