வீட்டுப்பாடம் எழுதாததால் 6ம் வகுப்பு மாணவர் தன் கழுத்தில் தானே பிளேடால் அறுத்து கொண்டு கொலை முயற்சி என நாடகம் - சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை
வீட்டுப்பாடம் எழுதாததால் 6ம் வகுப்பு மாணவர் தன் கழுத்தில் தானே பிளேடால் அறுத்து கொண்டு கொலை முயற்சி என நாடகம் - சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை
வத்தலக்குண்டில் வீட்டுப்பாடம் எழுதாத 6ம் வகுப்பு மாணவரொருவர், தன் கழுத்தில் தானே கீறல் போட்டுக்கொண்டு கொலை முயற்சி நாடகமாடியுள்ளார். சிசிடிவி காட்சியால் உண்மை வெளியானது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன் ஹோட்டல் நடத்தி வருகிறார் இவருடைய மகன் முனீஸ்வரன்(11) வத்தலகுண்டில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பள்ளி சென்ற மாணவனை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மாணவனின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றதாக தகவல் பரவியது.
கழுத்தில் ரத்தக்காயத்துடன் இருந்த பள்ளி மாணவன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தன்னை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் வெட்டி விட்டு சென்றதாக அந்த மாணவன் அனைவரிடமும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் வத்தலகுண்டில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்ட வத்தலகுண்டு போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனையிட்டபோது பள்ளி மாணவன் கூறியது முழுக்க முழுக்க பொய் என்பது தெரியவந்தது.
மீண்டும் போலீசார் பள்ளி மாணவரிடம் நடத்திய விசாரணையில் அறிவியல் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாகவும், ஆசிரியர் தன்னை கண்டிப்பார் என்ற அச்சத்தில் தானே பிளேடால் கழுத்தை தனது அறுத்துக் கொண்டதாகவும் அந்த மாணவன் கூறியதைக் கேட்டு அவனது பெற்றோர், போலீசார் என அனைத்து தரப்பினரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுப்பாடம் எழுதாததை மறைக்க பள்ளி மாணவன் நடத்திய நாடகம் தற்போது அம்பலம் ஆகியுள்ளது இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்