6000 கிலோமீட்டர் தூரம் சென்று விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் ட்ரோன்கள் - ரஷ்யா அதிர்ச்சி
6000 கிலோமீட்டர் தூரம் சென்று விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் ட்ரோன்கள் - ரஷ்யா அதிர்ச்சி
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், போர் முடிவை எட்டவில்லை.இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா 109 டிரோன்கள், 5 ஏவுகணைகள் மூலம் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஏராளமான வீடுகள் இடிந்து தரை மட்டமாகின பலர் உயிரிழந்தனர் ,மேலும் பலர் காயமடைந்தனர்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷியாவின் விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கான விடியோக்கள் காட்சிகள் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றன.
ரஷிய விமானப்படைத் தளங்களை நீண்ட தூர ஏவுகணைகளை வீசும் Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்கள் மூலம் வீசி உக்ரேனியப் படைகள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனிய பாதுகாப்பு சேவை வட்டாரங்களின்படி, ஆபரேஷன் வெப் என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதல், Tu-95, Tu-22M3 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் A-50 AWACS கண்காணிப்பு விமானம் போன்ற மூலோபாய சொத்துக்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள அந்நாட்டு விமானப்படை தளம் மீது உக்ரைன் இன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-லிருந்து இந்த விமானப்படை தளம் சுமார் 6,000 கி.மீ தொலைவில் இருக்கிறது. இவ்வளவு தொலைவில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன், ட்ரோன்கள் மூலம் துல்லியமாக தாக்கியிருப்பது ரஷ்ய ராணுவத்திற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு ட்ரோனும் தொடர்ந்து 6,000 தொலைவுக்கு பறக்காது. எனவே மரக்கட்டைகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரியில் இந்த ட்ரோன்கள் எடுத்து செல்லப்பட்டு இந்த லாரிகள் விமானப்படை தளத்தை நெருக்கியபோது, உக்ரைனிலிருந்து ஆப்ரேட் செய்யப்பட்டிருக்கிறது.
விமானங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பரவலான அழிவு பற்றிய கூற்றுக்களை ஆதரிக்கின்றன.
ரஷ்யா சமீபத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகே 50,000 துருப்புக்களை குவித்து, கியேவை நோக்கி ஒரு புதிய தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த ட்ரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
Tags: வெளிநாட்டு செய்திகள்