Breaking News

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்த 6 பேரும் ராஜ்யசபா எம்.பிகளாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆறு இடங்களுக்கான தேர்தலில், தி.மு.க மூன்றிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். 

அதேபோல், திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். கடந்த ஜூன் 6ம் தேதி  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் 4 பேரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதேபோல் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை, கடந்த ஜூன் 6ம் தேதி மதியம் 12.45 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இதேபோல் சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்ற நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. 10 எம்.எல்.ஏக்களின் முன்மொழிவு இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்பதால் சுயேட்சைகளின் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback