பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு தரும் ரூ. 50,000 பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அந்த இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரத்துக்கான வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலம் அளிக்கலாம்.
உங்களுக்கு ஒரேயொரு பெண் குழந்தை இருந்தால், அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யப்படும். அதுவே இரு பெண் குழந்தைகளாக இருந்தால் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வார்கள். பெண் குழந்தை பிறந்த மூன்றுஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆண் குழந்தை இருத்தல் கூடாது.
பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.
பெற்றோர்களில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்
ஒரு பெண் குழந்தை எனில் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாகவும்.
இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்
பயனடையும் குழந்தை 3 வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்.
வருமானச்சான்று.
இருப்பிடச்சான்று.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று.
சாதிச்சான்று.
பெற்றோரின் வயதுச்சான்று.
ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று.
குடும்ப அட்டையின் நகல்.
குடும்ப புகைப்படம்.
வழங்கப்படுவதற்கான கால அளவு:-
நிலை வைப்புத் தொகையின் 20-ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்படும்.
அணுக வேண்டிய அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட திட்ட அலுவலர்கள்
(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்).
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்), ஊர்நல அலுவலர்கள்.
இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் பி.டீ.ஓ. அலுவலகங்களில் கிடைக்கும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை இதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
Tags: தமிழக செய்திகள்