கேரளாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளயில் நடந்த்ச் சண்டையை மனதில் வைத்து தற்போது பழி வாங்கிய நண்பர்கள் முழு விவரம்
கேரளாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பள்ளி சண்டையை மனதில் வைத்து தற்போது அவரது நண்பர்களே தாக்கிய சம்பவம் முழு விவரம்
கேரள மாநிலம் காசர்கோட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பள்ளி சண்டையை மனதில் வைத்து முதியவரை அவரது நண்பர்களே தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது
1970-களில் 4ம் வகுப்பு படிக்கும்போது தங்களை தாக்கிய பாபுவை தற்போது அடித்து பழித்தீர்த்த மேத்யூ மற்றும் மாலோத்து பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 62 வயது நபரை தாக்கிய குற்றத்துக்காக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பள்ளியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2-ம் தேதி விஜே பாபு என்பவரை தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பாபு, தற்போது கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பாபு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பிஎன்எஸ் சட்டப்பிரிவு 126(2), 118(1), 3(5) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேத்யூ மற்றும் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர்.
Tags: இந்திய செய்திகள்