விமான விபத்தில் குடும்பத்துடன் 5 பேர் பலியான சோகம் - வைரலாகும் விமானத்தில் எடுத்த கடைசி செல்பி
விமான விபத்தில் குடும்பத்துடன் 5 பேர் பலியான சோகம் - வைரலாகும் விமானத்தில் எடுத்த கடைசி செல்பி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பிரதீப் ஜோஷி கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி கோனி வியாஸ் டாக்டராக பணி புரிந்து வந்துள்ளார் இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். ஏனெனில் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.
அந்தவகையில் குடும்பத்துடன் லண்டனுக்கு பயணமாகியுள்ளனர்.இந்த நிலையில், நேற்று நடந்த விமான விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கணவன் மனைவி அழகான மூன்று குழந்தைகள் இறுதியாக விமானத்தில் எடுத்த செல்பி அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த குடும்பத்தினரின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்
இந்தியாவை சேர்ந்த பிரதீக் ஜோஷி என்பவர், லண்டனில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தியாவின் உதய்பூரில் 3 குழந்தைகளோடு வசித்து வந்த அவரது மனைவி கோமி வியாஸ், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்