மகாராஷ்டிரா அதிக கூட்டம் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் தவறி கீழே விழுந்ததில் 5 பேர் பலி Mumbai Railway Accident
மகாராஷ்டிரா அதிக கூட்டம் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் தவறி கீழே விழுந்ததில் 5 பேர் பலி Mumbai Railway Accident
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் மும்பையிலிருந்து லக்னோவுக்குச் செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதன் கதவுகளின் இருபுறமும் பயணிகள் கதவில் தொங்கிக் கொண்டிருந்தனர். காலை நேரம் என்பதால் கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என ஏராளாமானோர் ரயிலில் பயணித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவில் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிக்கள் தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளனர். இதில் 6 பயணிகள் உயிரிழந்த நிலையில் , மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். காலை நேரம் என்பதால் கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என ஏராளாமானோர் புறநகர் மின்சார ரயிலில் பயணித்துள்ளனர். ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.recommended bySlim fitபடுக்குமுன் ஒரு ஸ்பூன் குடித்தால், 7 கிலோ எடை குறையும்தொப்பை மற்றும் தொடை கொழுப்பு வெறும் 3 நாட்களில் மறைந்துவிடும்!மேலும் அறிந்துகொள்ளFive lives lost in Mumbai train tragedy.அப்போது எதிர்பாராத விதமாக பயணிகள் பலர் தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் பலியான சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பயணிகள் திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையில் எதிர்பாராத விதமாக பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர் . சுமார் 12 பயணிகள் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கல்வாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, ரயில் பெட்டியில் அதிக பயணிகள் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.என்ன நடந்தது என்பது குறித்து மேலும் தெளிவு கிடைத்தவுடன் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் பலியான சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்