புனேவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆற்றுப்பாலம்..30 பேர் மாயம் வைரல் வீடியோ
புனேவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆற்றுப்பாலம்..30 பேர் மாயம் வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் புனேவில் குண்டுமலை என்கிற இடத்தில் உள்ள இந்திரயாணி ஆற்றின் நடுவே இருந்த 60 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த 20 முதல் 30 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், பாலத்துக்கு மேலே சென்று கொண்டிருந்த வாகனங்களும், நடந்து சென்ற பொதுமக்களும் அப்படியே ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் இந்திரயானை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனை அடுத்து அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படகுகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் என்.டி.ஆர்.எஃப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர்... 32 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர் 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கனமழை இடைவிடாது பெய்வதாலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் மீட்புப் பணிகள் தொய்வடைந்திருப்பதாக தெரிகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1934284716850782601
Tags: இந்திய செய்திகள்