Breaking News

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிப்பு.

சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது.

மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஞானசேகரன் குற்றவாளி எனவும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபனமாகியுள்ளதாகவும், அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அதாவது இன்று அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி என்று அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அடுத்து வரப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக விசாரித்த காவல்துறைக்கு நீதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback