Breaking News

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை - கர்நாடக அரசு புதிய சட்டம்

அட்மின் மீடியா
0

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடக அமைச்சரவையில் முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதாவில், காவல்துறை உத்தரவுகளுக்கு கீழ்படியாத அல்லது சட்டத்தை மீறும் எவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது ரூ. 5 லட்சம் அபராதம்  அல்லது இரு தண்டனைகளுமே விதிக்கப்படாலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு, சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் முன் காவல்துறை அனுமதியை பெறத்தவறினாலோ, கூட்டத்தினை நிர்வகிக்க முடியாவிட்டாலோ , ஏற்படும் எந்தவொரு தீங்குக்கும் ஈடு செய்யாவிட்டாலோ கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நேர்ந்தால், அது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும் எனவும், அவர்களால் ஜாமீனில் வெளி வர முடியாது என்றும், இந்த வழக்குகளை முதல்தர நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம் கோயில் தேரோட்டம், பாரம்பரிய மதக்கூட்டங்களான கண்காட்சிகள், படகு திருவிழா , பல்லக்கு ஊர்வலம் போன்ற கொண்டாட்டங்கள் இந்த மசோதாக்களின் கீழ் வராது என விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.,

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback