Breaking News

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரம் போலீசார் சோதனை..!

அட்மின் மீடியா
0

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரம் போலீசார் சோதனை..!



போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர். 

இதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து அவரிடம் துருவி துருவி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் உரிய ஆதாரங்கள் கிடைத்தால் கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை

இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன்.கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டேன்,  

மேலும் வாயுக்கோளாறும், அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்பதற்கான மருத்துவ சான்றிதழை கொடுத்துள்ளார்

அதேபோல் பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன் என  நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback