தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய போலி சான்றிதழ்கள் கொடுத்த 2 பேர் கைது.. நடந்தது என்ன
தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய போலி சான்றிதழ்கள் கொடுத்த 2 பேர் கைது.. நடந்தது என்ன
சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), மதுரையை சேர்ந்த கவிதா (42) ஆகிய இருவரும், உத்திரபிரதேச சட்டக் கல்லூரியில் 2013 முதல் 2018 வரை படித்தது போல் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். அதைவைத்து சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சலில் பதிவு செய்ய முயன்றனர்.
அப்போது, பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த சான்றிதழ் போலி என தெரிய வந்ததை அடுத்து 2 பேரையும் பிடித்து உயர்நீதி மன்ற வளாகதில் உள்ள போலீசிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர்களிடமிருந்து 2 டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களுக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து தந்தவர்கள் யார்? இடைதரகர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்