மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
யூபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்வான நபர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.25 ஆயிரம் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து ஜூலை 02 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்