Breaking News

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடுக்கு நிதி ஒதுக்க  மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback