Breaking News

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி வெளியிட்ட கட்டுப்பாடு..! மீறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

அட்மின் மீடியா
0

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி வெளியிட்ட கட்டுப்பாடு..! மீறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்



காலி நிலங்களை வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இனி காலி நிலங்களை சரியான முறையில் பராமரிக்க தவறினால், உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், வழிகாட்டுதல்களை மீறி தொடர்ந்து நியமங்களை மீறினால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 என்ற அடிப்படையில் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காலி நிலங்களில் குப்பைகள், மழைநீர், கட்டிடக் கழிவுகள் ஆகியவை தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே நேரத்தில், மேலெழும்பிய செடிகளை அகற்றி, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்காக நில எல்லையை சுற்றி உறுதியான, பாதுகாப்பான வேலி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடக்கழிவு அல்லது கட்டிடத் தூள்கள் போன்றவைகளை அகற்றாமலிருப்பதும், அதனை எரிப்பதும் பொதுசுகாதாரத்திற்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்லப் போனால், காலி நிலங்களை சீராக பராமரித்து, அவை சுற்றுச்சூழலுக்கும் மக்கள் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மாநகராட்சியின் முக்கிய நோக்கமாகும்.

காலி நிலங்களை கொண்ட நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

ஒரு பொறுப்புள்ள நில உரிமையாளராக, திடக் கழிவுகள் மேலாண்மை விதிமுறைகள் 2016, பொது சுகாதாரச் சட்டம், TNULB சட்டம் 1998 மற்றும் TNULB விதிமுறைகள் 2023 ஆகியவற்றின் படி வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் அவசியமாகும். காலி நிலங்களை முறையாக பராமரிப்பதன் மூலம், நகர சுத்தம். பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு நீங்கள் பங்களிக்கின்றீர்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி காலி நிலங்களை பராமரிக்க நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட விரிவான வழிமுறைகளை நில உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும்:

காலி நிலத்தை சுத்தம் செய்தல்:

a. நிலத்தில் அதிகமாக வளர்ந்துள்ள செடிகள், குப்பைகள் அல்லது தேங்கியுள்ள நீர் போன்றவற்றை அடையாளம் காண, நிலத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும்.

b. கொசுகள் மற்றும் எலி போன்ற உயிரினங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையில், அதிகமாக வளர்ந்துள்ள செடிகள், புதர்கள் மற்றும் புல்வெளிகளை அகற்ற வேண்டும்.

c. அகற்றப்பட்ட செடிகளை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும்

கழிவு மேலாண்மை:

a. நிலத்தில் திடக்கழிவு அல்லது கட்டிட கழிவுகள் தேங்கியிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

b. கழிவுகள் காணப்பட்டால், உடனடியாக அகற்றி, திடக் கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2016 ன் படி பிரித்து (மறு பயன்படுத்தக்கூடியவை / அல்லாதவை) அகற்ற வேண்டும்.

C சுற்றுச்சூழலுக்கும். பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்க காரணமாகயிருக்கும். கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நீர் வடிகால் பராமரித்தல் மற்றும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்துதல்:

a. நிலத்தில் நீர் தேங்கிய பகுதிகள் உள்ளதா என அடிக்கடி பார்வையிட வேண்டும்.

b. நிலத்தில் நீர் தேங்காதிருக்க, கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை பராமரித்து, அவற்றில் எந்தவொரு தடையும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.

C நிலத்தில் தேங்கியுள்ள நீர் மூலமாக, கொசுக்கள் இனப்பெருக்கம் மற்றும் நோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில் உடனடியாக அதை வடிகால்வாய்களில் அனுப்பவோ அல்லது தீர்வு அளிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலிச்சுவர்கள் மற்றும் பாதுகாப்பு:

a. அனுமதி இல்லாத நுழைவு. சட்டவிரோதமாக குப்பைகொட்டுதல் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தடுக்க, காலி நிலத்தின் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

b. வேலியின் சேதங்களை அடிக்கடி பரிசோதித்து, உடனடியாக பழுதுபார்த்து சரிசெய்ய வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒத்துழைப்பு:

a காலி நில பராமரிப்பு தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை. சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறையுடன் தொடர்பு வைத்திருக்க உரிமையாளர்கள் அவர்களின் தொடர்பு எண் மற்றும் அஞ்சல் முகவரியை வழங்கிட வேண்டும்.

b. ஆய்வுகளின்போது அதிகாரிகளுடன் ஒத்துழைத்து. அவர்களிடமிருந்து பெறப்படும் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு விரைவில் பதிலளிக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வலியுறுத்தல்கள்:

சமூக நலனுக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றுவது மிகவும் அவசியம். இவைகளை பின்பற்றத் தவறினால், TNULB சட்டம் 1998 இன் பிரிவு 177 (4) ன் அடிப்படையிலும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிமுறைகள், 2023 (TNULB விதிமுறைகள் 2023) இன் அத்தியாயம் XII (பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை) கீழ் உள்ள விதி எண் 384, 385 மற்றும் 392 (உபவிதிகள் 5 & 6 ) அடிப்படையிலும் காலி நிலங்களை உரிமையாளர் பராமரிக்கப்பட வேண்டும்.

எச்சரிக்கை அறிவிப்பு:

TNULB சட்டம் 1998, TNULB விதிமுறைகள் 2023 அல்லது வழிகாட்டுதல்களை மீறி உரிமையாளர் நடந்துகொண்டால். அவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். குறைகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரிசெய்ய மதிப்பிடப்பட்ட கால அவகாசம் (7 நாட்கள்) வழங்கப்படும்.

வழிகாட்டி கண்காணிப்பு:

எச்சரிக்கை அறிவிப்புக்குப் பிறகு, உதவி பொறியாளர் / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு. குறிப்பிட்ட நேரத்தில் குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளனவா என பரிசோதிப்பார்கள்.

காலி நிலத்திற்கு பொருந்தக்கூடிய TNULB சட்டம், விதிமுறைகள் மற்றும் துணைச்சட்டங்கள்: I) TNULB விதிமுறைகள் 2023

a) விதி எண் 384-(அத்தியாயம் XII- பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை)

-இரைச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்த்தல்/அகற்றுதல் ஆணையர் அவர்கள். ஒரு கட்டிடத்தில் அல்லது நிலத்தில் குவிக்கப்பட்டுள்ள நிலக்கரி, பட்டாசு. ராகி மூட்டைகள், பருத்தி பலகை அல்லது வேறு ஏதேனும் பொருட்கள், அவற்றின் செயலாக்கம், அல்லது எரிப்பு மூலம் தூசி துகள்கள், புகை, மோசமான வாசனை அல்லது சத்தம் போன்றவற்றால் அருகிலுள்ள மக்களுக்கு இரைச்சல் ஏற்படுமென கருதினால் உரிமையாளர் பயன்படுத்துபவருக்கு அறிவிப்பு வழங்கி, அந்த செயல்படுகளை நிறுத்த/அகற்ற நடவடிக்கை எடுக்க ஆணையர் கூறலாம். இந்த அறிவிப்பைப் பின்பற்றத் தவறினால், சட்டம் பிரிவு 180ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

b)விதி எண் 385-(அத்தியாயம் XII- பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை)

வெக்டார் கட்டுப்பாடு (Vector Control) பெருநகர சென்னை மாநகராட்சிக்குள் கொசு மற்றும் எலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மற்றும் நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்க ஒழுங்குமுறைகள் வகுக்கலாம். எந்தவொரு கட்டிட உரிமையாளர் அல்லது பயன்படுத்துபவர் கொசு அல்லது வேறு வெக்டார் இனப்பெருக்கத்திற்கான சூழலை ஏற்படுத்துவதாக ஆணையர் கருதினால், அவர்களுக்கு அதனை அகற்ற அறிவிப்பு வழங்கலாம். அறிவிப்பினை பின்பற்றாவிட்டால், பெருநகர சென்னை மாநகராட்சி தானாகவே நடவடிக்கை எடுத்து செலவுகளை உரிமையாளரிடமிருந்து வசூலிக்கலாம். இதையும் பின்பற்றத் தவறினால், சட்டப்பிரிவு 180ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

c) விதி எண் 392, உபவிதிகள் 5 & 6 - (அத்தியாயம் XII - பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை): திடக்கழிவு அகற்றம்-

(5) எந்தவொரு நபர் அல்லது உரிமையாளர்/பயன்படுத்துபவர் திடக்கழிவுகளை பொது இடத்தில் அல்லது திறந்த நிலத்தில் வீசக் கூடாது. அவ்விதமாகக் கழிவுகளை சுத்தமற்ற வழியில் தூரத்தில் வீசவோ அல்லது இறந்த விலங்குகளின் உடல்கள் அல்லது அதன் பகுதிகளை தவறான இடத்தில் வைக்கவோ கூடாது.

(6) ஒவ்வொரு உரிமையாளரும் அல்லது திறந்த நிலத்தை பராமரிக்கும் நபரும் அந்த நிலத்தை சுத்தமாகவும், குப்பை, கழிவுநீர் மற்றும் கொசு இனப்பெருக்கத்திற்கான செடிகள் இல்லாத வகையிலும் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதிருந்தால், ஆணையர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் குப்பைகளை அகற்ற அறிவிப்பு தரலாம். பின்பற்றாவிட்டால். மாநகராட்சி அதிகாரிகள் சுத்தம் செய்து, செலவுகளை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

II) TNULB 1998 TNULB சட்டம் 1998ன் பிரிவு 180:

அபராதங்கள்: 

இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி வெளியிடப்பட்ட விதிமுறைகள். துணைச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் அல்லது உத்தரவுகள் திசைகாட்டுதல்களை மீறும் நபர். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் ரூ.25,000/- வரை அபராதம் விதிக்க TNULB சட்டம் 1998ன் பிரிவு 180 சட்டத்தில் வழிவகை உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 ("TNULB சட்டம் 1998") மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிமுறைகள், 2023 ("TNULB விதிமுறைகள் 2023") இன் அத்தியாயம் XII (பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை) கீழ் உள்ள விதி எண் 384, 385 மற்றும் 392 (உபவிதிகள் 5 & 6) ஆகியவற்றின் கீழ், விதிமுறைகளை பின்பற்றாததற்காக அபராதங்களை விதிக்கும் அதிகாரம் பெருநகர சென்னை மாநகராட்சி

நிர்வாகத்தின் கீழுள்ள பின்வரும் அலுவலர்களுக்கு அதில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உதவி செயற் பொறியாளர்/உதவி பொறியாளர்கள்

சுகாதார அதிகாரிகள் / சுகாதார ஆய்வாளர்கள்

துப்புரவு மேற்பார்வையாளர்கள் / துப்புரவு ஆய்வாளர்கள்

1 தொல்லைகள்/தொந்தரவுகள் மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கான அறிவிப்புகள் வழங்குதல்:

TNULB விதிமுறைகள் 2023 இன் அத்தியாயம் XII இல் உள்ள விதி எண் 384 மற்றும் 392 உபவிதிகள் 5 6 & 7 ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் அலுவலர்கள் அறிவிப்புகளை வழங்கலாம்:

உதவி பொறியாளர் / உதவி செயற் பொறியாளர்

துப்புரவு ஆய்வாளர் / துப்புரவு மேற்பார்வையாளர்

2 வெக்டார் கட்டுப்பாடு (கொசு, எலி மற்றும் பிற ஊர்வன விலங்குகள்):

TNULB விதிமுறைகள் 2023 இன் அத்தியாயம் XII இல் உள்ள விதி எண் 385 அடிப்படையில், பின்வரும் அலுவலர்கள் வெக்டார் கட்டுப்பாடு குறித்த அறிவிப்புகளை வழங்கலாம்:

சுகாதார அதிகாரிகள் / சுகாதார ஆய்வாளர்கள்

நில உரிமையாளர்களுக்கான தகவல்:

TNULB சட்டம் 1998 இன் பிரிவு 180 இன் கீழ், ரூ.25,000/- அபராதம் விதிக்கவும். மேலும் குற்றம் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500/- வரை கூடுதல் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

இனி வருங்காலங்களில், ஒரு காலி நிலத்தில் குப்பைகள் அகற்றப்படாமல், அது பொதுநலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் பட்சத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் செலவு, அந்த நிலத்தின் திடக்கழிவுகள் அகற்றும் கட்டணம் என்ற தலைப்பின் கீழ் நில வரிப்பட்டியலில் சேர்க்கப்படும்.

i)TNULB சட்டம் 1998, விதி 180 மற்றும் நகராட்சித் துறை விதிகள் 384, 385 மற்றும் 392 (உபவிதிகள் 5, 6 மற்றும் 7) என்பவற்றின்படி காலியாக உள்ள நிலத்தை முறையாக பராமரிக்கப்படாதவை அல்லது பொதுமக்களுக்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வைத்திருப்பவர்களுக்கு

அறிவுப்பு சம்மந்தப்பட்ட அலுவலர்களால் காலி நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

காலி நிலங்களின், நில உரிமையாளர்கள் திடக்கழிவுகளை அகற்றாமல், பொதுமக்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டால், அந்தக் கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்கள் மூலமாக அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகை திடக்கழிவுகள் அகற்றும் கட்டணம்" என்ற தலைப்பில் காலி நில வரிக்குள் சேர்க்கப்படும். மேலும், கழிவுகளின் அளவுக்கு ஏற்றவாறு கீழ்கண்ட தொகையை வசூலிக்கப்படும்.

5 மெ.டன் வரை உள்ள கழிவுகளுக்கு =ரூ.5,800/-

10 மெ.டன் வரை உள்ள கழிவுகளுக்கு =ரூ.11,600

https://chennaicorporation.gov.in/gcc/vacant_land_owners/Vacant%20Land%20Guide%20Lines%20Notice_Tamil.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback