Breaking News

குஜராத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்து 242 பேர் பலி - நடந்தது என்ன முழு விவரம் air india flight accidernt

அட்மின் மீடியா
0

குஜராத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்து 242 பேர் பலி - நடந்தது என்ன முழு விவரம்


குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. வழக்கம் போல் எவ்வித இடையூறுமின்றி டேக் ஆஃப் ஆன விமானம் புறப்பட்ட 5-ஆவது நிமிடத்தில் தடுமாற ஆரம்பித்தது. சுமார் 825-வது அடியை எட்டிய போது விமானம் அதற்கு மேல் செல்ல முடியாமல் திணறியது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் குடியிருப்புகள் நிறைந்த மேகானி நகர் என்னும் பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.

முழு அளவில் எரிபொருள் இருந்த காரணத்தினால் தான் கீழே விழுந்ததும் பயங்கரமாக விமானம் வெடித்து சிதறியுள்ளது. விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் லண்டன் செல்ல வேண்டியது என்பதால் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது

விமானம், மருத்துவ விடுதியின் மீது விழுந்ததால் அங்குள்ளவர்களும் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். 

விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர் மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.சுமார் 90 மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அகமதாபாத் விமானம் விழுந்ததில் இதுவரை 242 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது. .

விமானியின் எச்சரிக்கை:-

விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை  இழந்ததும் அபாயத்தை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டுள்ளார். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து 1.38 மணிக்கு MAY DAY எனப்படும் அபாயத்தை தெரிவிக்கும் சிக்னலை விமானி அனுப்பியுள்ளார். 

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பதில் வருவதற்கு முன்னரே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துள்ளது. 

மே டே கால் என்றால், ஒரு விமானமோ, கப்பலோ ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில், அதனை இயக்குபவரால், கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் சமிக்ஞையாகும். 

இது மிக ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதை சொல்லும் தகவலாகும். எனவே விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால்தான், கடைசி நேரத்தில் நடந்தது குறித்து தெரிய வரும் . 

வீடியோ பார்க்க:-

விழுந்து நொறுங்கிய விமானம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1933187409891758116

விமான நிலையம் மூடல்:-

ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. ம

று அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை. அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமை விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 

விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் அங்கே தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

குஜராத் முன்னாள் முதல்வர் பலி:-

விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டுள்ளார். 

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர் 

விபத்தில் இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1

971ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-ல் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக பொதுச்செயலாளர், மாநில தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தார்.

டி.என்.ஏ பரிசோதனை

விமான விபத்தில் இறந்தவர்களின் சடலங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கருகிய உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை செய்ய குஜராத் அரசு தீவிரம் காட்டிவருகிறது. உயிரிழந்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்சய் திவேதி கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர் பிழைப்பு:-

விமானத்தின் 11A இருக்கையில் பயணித்த விஷ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷ்வாஸ் குமார் பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியராவார். 

ரூ 1கோடி நிவாரணம் டாடா குழுமம் அறிவிப்பு:-

விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

மேலும் காயமடைந்தோரின் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும், சேதமான மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கவலை அடைந்தோம் என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback