Breaking News

20 ஆண்டுகளாக தூங்கும் சவூதி இளவரசர் கண் விழித்தார் என பரவும் வீடியோ உண்மை என்ன Saudi Sleeping Prince wakes up after 20 years in coma? Truth is here

அட்மின் மீடியா
0

20 ஆண்டுகளாக தூங்கும் சவூதி இளவரசர் கண் விழித்தார் என பரவும் வீடியோ உண்மை என்ன Saudi Sleeping Prince wakes up after 20 years in coma? Truth is here

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால்

சவுதி அரேபியாவின் இளவரசர் முழுப் பெயர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், “தூங்கும் இளவரசர்” என அறியப்படுகிறார்.

இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், தற்போதைய மன்னரின் நேரடி மகன் இல்லை. அதாவது இளவரசர் அல்-வலீத்தின் தாத்தா இளவரசர் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத் என்பவர் சவுதி நிறுவனரும் முதல் மன்னருமான அப்துல்அஜிஸ் அல் சவூதின் பல மகன்களில் ஒருவர். 

அதன்படி பார்த்தால் இளவரசர் அல்-வலீத் மன்னர் அப்துல்அஜிஸின் கொள்ளுப் பேரன். மறுபுறம் சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், சவுதி முதல் மன்னர் அப்துல்அஜிஸின் மகனும் ஆவார், அதாவது அவர் தூங்கும் இளவரசர் அல்-வலீத்தின் மாமா ஆவர்.

விபத்து:-

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் 2005 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில், மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக. 21 ஆண்டுகளாக கோமா நிலையில் வாழ்ந்து வருகின்றார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் 21 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறார். இவரது உடல், இயந்திரங்களின் உதவியுடன் மட்டுமே உயிர் வாழ்கிறது. இவருக்கு உணவுக் குழாய் மூலமே உணவும் வழங்கப்பட்டு வருகிறது

நம்பிக்கை:-

இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், ‘தூங்கும் இளவரசர்’ என்ற பெயரில் உலகிற்கு அறியப்பட்டாலும், அவரது கதை ஒரு மனிதனின் உயிருக்காக நடத்தப்படும் போராட்டத்தின் குறியீடாக அமைந்துள்ளது. 

20 ஆண்டுகளாக கோமாவில் உறங்கும் இவருக்கு, ஒரு நாள் சுயநினைவு திரும்பும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பம் காத்திருக்கிறது. 

வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், மனித நம்பிக்கையின் வலிமையையும் நமக்கு உணர்த்துகிறது.

கடவுள் அவன் உயிரை எடுக்க விரும்பியிருந்தால், விபத்தின் போதே நடந்திருக்கும். அவர் மீண்டு வருவார்" என அவரது தந்தை காலித் பின் தலால் அல் சவுத் 21 வருடங்களாக வலியுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்.

பரவும் பொய் செய்தி:-

வைரல் ஆகும் வீடியோவில் ஒருவர் கண் விழித்தெழுந்து தனது குடும்பத்துடன் மீண்டும் பேசுகின்றார் இந்த வீடியோவை சவுதி அரேபியாவின் தூங்கும் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், தான் கோமாவில் இருந்து ஆண்டுகளுக்கு பிறகு கண் விழித்துள்ளார் என  அந்த  வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. 

உண்மை சரிபார்ப்பு: 

இல்லை, சவுதி 'தூங்கும் இளவரசர்' 20 ஆண்டுகள் கோமாவில் இருந்தும் எழுந்திருக்கவில்லை.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் காணப்படுபவர் யாசீத் முகமது அல்-ராஜ்ஹி, இவர்பிரபல சவுதி தொழிலதிபர் மற்றும் கார் சாம்பியனாவார். 

அவர் சமீபத்தில் பாஜா ஜோர்டான் பந்தயத்தின் இறுதி கட்டத்தின் போது கார் விபத்தில் காயமடைந்தார். அவர் குணமடைந்தன் ஒரு பகுதியாக, மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் தனது அன்புக்குரியவர்களுடன் உரையாடுவதைக் காட்டும் பல வீடியோக்கள் பகிரப்பட்டன. 

தூங்கும் இளவரசர் அல்-வலீத் விழித்துவிட்டார் என்ற கூற்று தவறானது. இளவரசர் கோமா நிலையில் இருக்கிறார், மேலும் அவரது நிலையில் எந்த மாற்றத்தையும் எந்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் உறுதிப்படுத்தவில்லை. 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback