சென்னையில் கத்தியுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட 2 இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!
கத்தியுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட 2 இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!
சென்னையில் உள்ள புளியந்தோப்பு ராமசாமி தெரு பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான்(19), ஃபர்கான் மற்றும் புளியந்தோப்பு பழைய வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் (19) ஆகிய மூன்று இளைஞர்களும் கையில் கத்தியை வைத்து கொண்டு இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பொதும்மக்களை அச்சுறுத்தும் விதமாக இளைஞர்கள் வீடியோ வெளியிட்டதாக புளியந்தோப்பு போலீஸாருக்கு தகவல் வந்ததையடுத்து வழக்குபதிவு செய்த போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதன்பின்பு வீடியோ பதிவிட்ட ரிஸ்வான் மற்றும் ஃபைசல் ஆகிய இருவரையும் கைது செய்த புளியந்தோப்பு போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞர் ஃபர்கானை தேடி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்