Breaking News

கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சட்ட கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட 3 பேர் கைது.. Kolkata law college student gang raped

அட்மின் மீடியா
0

கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சட்ட கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட 3 பேர் கைது.. Kolkata law college student gang raped

கொல்கத்தா சட்ட கல்லூரி வளாகத்தில் கடந்த புதன்கிழமை இரவு மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இரு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்  இந்த பாலியல் பலாத்கார கொலை வழக்கின் கொடூரம் இன்னும் மறையாத நிலையில், இந்த சம்பவம் மீண்டும் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் 24 வயதான மாணவியை அங்கிருந்த கல்லூரி ஊழியர் ஒருவர் இரு மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாதுகாவலர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் வைத்து அடித்து, மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை, வீடியோ எடுத்து நடந்ததை வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கல்லூரியில் பணியாற்றி வரும் 31 வயதான மனோஜித் மிஸ்ராவும் அதே கல்லூரியில் படிக்கும் 20 வயதான பிரமித் முகர்ஜி மற்றும் 19 வயதான ஜைப் அகமது என்பது தெரியவந்தது. 

இதில் மனோஜித் மிஸ்ரா  அந்த  மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார்  ஆனால் அவர்  ஏற்கனவே தான் வேறொருவரை காதலிப்பதாக தெரிவித்துமறுத்துவிட்டதால், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. கைதான மூவரையும் 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback